சட்ட விரோத மதுபானம், வாள் மற்றும் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

12 Feb, 2020 | 01:57 PM
image

அகலவத்தை பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோத மதுபானம், வாள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 

அகலவத்தை - ஓமத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்ரை சம்பவ தினத்தன்று விஷேட அதிரடிப்படையினர் சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது குறித்த வீட்டிலிருந்து 3750 மில்லிலீற்றர் சட்ட விரோத மதுபானம் மீட்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் வாள் ஆகியன மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

எஹெலியகொடை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11