அகலவத்தை பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோத மதுபானம், வாள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
அகலவத்தை - ஓமத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்ரை சம்பவ தினத்தன்று விஷேட அதிரடிப்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டிலிருந்து 3750 மில்லிலீற்றர் சட்ட விரோத மதுபானம் மீட்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் வாள் ஆகியன மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எஹெலியகொடை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM