புதிய கொரோனா வைரஸ் சீன நகரங்களை பேரழிவிற்குட்படுத்தி உலகெங்கிலும் பல நாடுகளில் பரவுவது “மிகவும் கடுமையான அச்சுறுத்தல்” என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளதுடன் அதன் பாதிப்பை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுள்ளார்.
"எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் விட வைரஸ்கள் மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
ஜெனீவாவில், 400 விஞ்ஞானிகள் மற்றும் பிற நிபுணர்களின் சர்வதேச கூட்டத்தின் பின்னர் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கு 18 மாத காலம் நீடிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதுவரை இருக்கும் சிகிச்சை முறைகளை கொண்டு கொரோனா வைரஸை கட்டுபடுத்த நாம் செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸிற்கு கொவிட் - 19 ( COVID-19 ) என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ள அவர் இந்த பெயர் ஏனைய பெயர்களைவிடவும் துல்லியமாக இருக்கக்கூடும் என்றும் விளக்கினார்.
இதுவரை, கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் தொகையானது தற்போது 1,115 ஆக பதிவாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டோர் தொகையும் 45,171 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், கொங்கொங்கின் முன்னணி பொது சுகாதார தொற்றுநோயியல் நிபுணர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்படுத்த முடியாவிட்டால் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வரை பரவக்கூடும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM