யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் இன்று காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது டிப்பர் வாகனம் ஒன்றிலிருந்து 100 கிலோ கன்சா போதைப் பொருளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் காரைநகர்- யாழ்ப்பாணம் வீதியில் தேடுதல் நடவடிக் கையில் ஈடுபட்டனர். இதன்போது, குறித்த டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் வழி மறுத்துள்ளனர். இதனை அறிந்த டிப்பர் வாகன சாரதி நடு வீதியில் நிறுத்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட விசேட அதிரடிப் படையினர் 100 கிலோ கன்சா போதைப் பொருளை மீட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் டிப்பர் வாகனம் ஆகியன மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM