யாழில்100 கிலோ போதைப் பொருள் மீட்பு

Published By: Daya

12 Feb, 2020 | 10:52 AM
image

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் இன்று காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது டிப்பர் வாகனம் ஒன்றிலிருந்து 100 கிலோ கன்சா போதைப் பொருளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் காரைநகர்- யாழ்ப்பாணம் வீதியில் தேடுதல் நடவடிக் கையில் ஈடுபட்டனர். இதன்போது, குறித்த டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் வழி மறுத்துள்ளனர். இதனை அறிந்த டிப்பர் வாகன சாரதி நடு வீதியில் நிறுத்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளார். 



குறித்த டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட விசேட அதிரடிப் படையினர் 100 கிலோ கன்சா போதைப் பொருளை மீட்டதாகத் தெரிவித்துள்ளனர். 
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் டிப்பர் வாகனம் ஆகியன மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41