கொரோனா வைரஸால் பரவும் புதிய நோய்க்கு உலக சுகாதார ஸ்தாபனம் “கொவிட்-19” (Covid-19) என்ற புதிய பெயரிட்டுள்ளது.
Photograph by Reuters
சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.
குறித்த கொரோன வைரஸ் உலகம் நாடுகள் முழுவதும் பரவிய நிலையில், நேற்றைய நிலவரப்படி இதுவரை 1017 பேர் உயிரிழந்துள்ளதுடன் 42,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பரவும் நோய்க்கு 'கொவிட்-19’ என புதிய பெயர் ஒன்றை ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றையதினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா (Corona) வைரஸ் (virus) நோய் (disease) மற்றும் வைரஸ் பரவிய ஆண்டான 2019 ஆகியவற்றை இணைத்து கொவிட்-19 (Covid-19) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் எந்த ஒரு புவியியல் இடத்தையோ, தனி நபரையோ, ஒரு குழுவையோ அல்லது விலங்குகளையோ குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கொரோனா வைரஸுக்கு கொவிட்-19 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM