(எம்.மனோசித்ரா)
ஜம்பட்டா வீதி துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு - ஜம்பட்டா வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாச்சூட்டை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.
அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய திங்கட்கிழமையான நேற்று மாலை பேலியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதானவர், 31 வயதுடைய ஹெட்டிபொல , குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரிடமிருந்து 9எம்.எம் ரக துப்பாக்கி ரவைகளை உபயோகிக்கக் கூடிய உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் இரு துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்தொலைபேசி என்பவை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் குறித்த சந்தேக நபர் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM