இணையத்தளம் மூலம் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகளிலிருந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த (07) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட 21 வயதான குறித்த சந்தேகநபர், கணனித் துறையில் பணியாற்றி வரும் ஒருவர் என்பதோடு, அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தளம் மூலம் கொழும்பு, கம்பஹா மற்றும் அதனை அண்டியுள்ள பிரபலமான பாடசாலைகளிலுள்ள மாணவர்களை இரவு வேளைகளில், சமூக வலைத்தளங்களில் போலியாகத் தயாரிக்கப்பட்ட WhatsApp, Instagram, Facebook, Snapchat போன்ற கணக்குகளின் ஊடாக, பெண்களைப் போன்று அல்லது ஆண்களைப் போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மாணவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
அத்துடன், அச்சிறுவர்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, அவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று பின்னர் அவற்றை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆபாச இணையத் தளங்களுக்கு வழங்குவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எனவே, இவ்வாறான இணையத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க வேண்டாம் என, இவ்வாறான சிறுவர்கள் உள்ளிட்ட சமூகத்திலுள்ள அனைவரையும் பொலிஸார் வேண்டியுள்ளனர்.
இதேவேளை, தங்கள் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தியும் வேறொரு நபருக்கு சிம் அட்டைகளை வழங்குதல், தன்னால் கொள்வனவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் மூலம் இணையத்தில் சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட WhatsApp, Instagram, Facebook, Snapchat போன்றவற்றின் கணக்குகளின் கடவுச் சொல்லை வேறு நபர்களுக்குக் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
விசேடமாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் இவ்வாறான நிலைக்கு ஆளாவதிலிருந்து தடுப்பதற்காக, சிறுவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருந்து, அவர்களை உரிய முறையில் கண்காணித்துக் கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM