(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியு தீன், காணி கொள்வனவு செய்தது தொடர்பில் 227 ஆவணங்களின் மூலப்பிரதிகளும், 8 முதல் பிரதிகளும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இவை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரும், பதில் பொலிஸ்மா அதிபரும் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, 52 நாட்கள் அரசியல் நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் அவரது அமெரிக்க வங்கிக் கணக்குக்கு இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரினார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக் கப் பெற்ற தகவல்களுக்கமைய ஞாயிற் றுக்கிழமை நபரொருவருடைய வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது, அந்த வீட்டிலிருந்து பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வெவ்வேறு நபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்துள்ள நிலங்கள் தொடர்பிலான ஆவணங்களின் 227 மூலப்பிரதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோன்று உண்மையான ஆவணங்கள் எட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 227 மூலப்பிரதிகளிலிருந்து எத்தனை ஏக்கர்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் என்று கணிப்பிட முடியும்.
இவை மாத்திரமின்றி ச.தொ.ச விற்பனை நிலையத்தின் மூலம் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் தொடர்பிலான ஆவணங்களும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
உதாரணமாக மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்யும்போது பெறுமதி குறைந்த இயந்திரத்தை கொள்வனவு செய்து, அதற்கு கூடிய விலையை காண்பித்தல் போன்ற பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றை பற்றி மாத்திரம் ஆராய்ந்து கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. எனவே பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் நிலவிய 52 நாட்கள் அரசாங்கத்தின் போது ரிஷாத் பதியுதீனுடைய அமெரிக்க வங்கிக் கணக்குக்கு இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இரண்டாவது தடவை இவ்வாறு வைப்பிலிட முற்படும்போது சந்தேகத்தின்பேரில் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் ஏன், எதற்காக வைப்பிலிடப்பட்டது என்பது தொடர்பில் தீர்க்கமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இவற்றை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது ரிஷாத் பதியுதீன் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட் டிருக்கின்றமை வெளிப்படுத்தப்பட்டுள் ளது. இவை தொடர்பான முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM