(செ.தேன்மொழி)
மதுபான நிலைய உரிமையாளர்களுக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை எந்தக்கட்சியும் பெற்றுக்கொடுக்கக்கூடாது என்று இலங்கை மது ஒழிப்பு மகா சபையின் தலைவரான பேராசிரியர் இத்தேபானே தம்மாலங்கார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு - விஜேராம மாவத்தையிலுள்ள சர்வதேச விபஸ்ஸனா தியான மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
புகைத்தல், மது அருந்துதல் மற்றும் போதைப் பொருள் பாவனையின் காரணமாக வருடத்திற்கு 40 ஆயிரம் பேர்வரை உயிரிழக்கின்றனர். இதனால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த உயிரிழப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போதைப்பொருள் பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காகவும் மது ஒழிப்பு மகா சபை பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கமைய நூற்றுக்கும் அதிகமான மதுபான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மதுபோதைக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மது போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 400 குடும்பங்கள் இருக்கும் ஒரு கிராமத்திலே வருடத்திற்கு மதுபானம் மற்றும் புகைத்தலுக்காக இரண்டரைக்கோடி ரூபாய் பணத்தை செலவிடுகின்றனர். இதனால் நாட்டுக்கு பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. வருடத்திற்கு புகைத்தல் காரணமாக 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதுடன், மதுபான பாவனையினால் 18 ஆயிரம் பேரும், ஏனைய போதைப்பொருள் பாவனையினால் 2000 பேர் வரையிலும் உயிரிழக்கின்றனர். இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் இவற்றுக்கான விற்பனையை குறைக்க வேண்டும். இந்நிலையில் அடுத்து பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது . இதன்போது மதுபான நிலையங்களின் உரிமையாளர்கள் எவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை கட்சிகள் பெற்றுக்கொடுக்கக் கூடாது. அவ்வாறு அவர்களில் எவராது போட்டியிட்டால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்காது நிராகரிக்க வேண்டும்.
பிரதி தலைவர் குப்பியாவத்தே போதானந்த தேரர் கூறியதாவது ,
இன்று இளம் தலைமுறையினரை இலக்கு வைத்தே இந்த போதைப் பொருள் விநியோகங்கள் இடம்பெற்றுவருகின்றன. போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், மிக சூட்சுமமான முறையில் இந்த கடத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் எமது நாட்டின் எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
எந்தவித போதைப் பொருளையும் பயன்படுத்தாத சிறந்த தலைவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கிடைத்துள்ளார் . இவருடன் ஒன்றிணைந்து போதைப் பொருள் அற்ற நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதேவேளை இளம் தலைமுறையினர் மத்தியில் போதைப் பொருள் தொடர்பில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
இதன்போது இலங்கை மது ஒழிப்பு மகா சபையின் தலைவரான பேராசிரியர் இத்தேபானே தம்மாலங்கார தேரர், பிரதி தலைவர் குப்யாவத்தே போதானந்த தேரர், பிரதி செயலாளர் பத்தேரிய விமலஞான நாஹிமி, சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார மற்றும் விசேட வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM