(இராஜதுரை ஹஷான்)
இலவசக் கல்வியை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் எவ்வித பாதிப்புமின்றி சுதந்திரமாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழலை ஜனாதிபதி துரிதமாக முன்னெடுப்பார். பகிடிவதையால் 2019ஆம் ஆண்டு மாத்திரம் பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்தியுள்ள 2000 மாணவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது . என தகவல் மற்றும் தொடர்பாடல் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான செயற்திட்ட த்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான வயதெல்லை 35 லிருந்து 45 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேர்முகப்பரிட்சையின் ஊடாக தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஒரு வருட கால பயிற்சி வழங்கப்படும், பயிற்சியின் போது 20 ஆயிரம் ரூபா மாதக் கொடுப்பனவு வழங்கப்படும்.
பயிற்சி முழுமை பெற்றதும் உரிய பிரதேசத்தில் உள்ளோர் அந்த பிரதேசத்திலேயே 5 வருட கால நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவர். எக்காரணிகளை கொண்டும் இடமாற்றம் வழங்க்கப்படமாட்டாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய 55 ஆயிரத்திற்கும அதிகமான வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
திறந்த பல்கலைக்கழகம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் ஒரு தரப்பினரால் குறிப்பிடப்பட்டு வருகின்றன. அரச பல்கலைக்கழக நிர்வாக முறைமைக்கும் திறந்த பல்கலைக்கழகத்திற்குமிடையில் பாரிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை நியாயமான முறையில் பேச்சுவார்த்தையின் ஊடாக பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை இல்லாது செய்யவே ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றார்கள்
பல்கலைக்கழகத்தில் இடம் பெறும் பகிடிவதையினால் தேசிய பல்கலைக்கழக கல்வி முறைமையினை வெறுத்து பல மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். இலவச கல்வியனை பெறும் மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுப்பார்.
பகிடிவதையினால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மாத்திரம் 2000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியினை இடைநிறுத்தியுள்ளார்கள். இது பாரியதொரு அநீதியாகும். முறையற்ற கலாசாரத்தினால் ஒரு கல்வி சமூகததின் எதிர்காலமே இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதற்காகவே ஓய்வுப் பெற்ற நீதியரசர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழுவினர் சாட்சியமளித்து நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM