திருகோணமலை- வவுனியா பிரதான வீதி வில்கம் விகாரை பகுதியில் தங்களுடைய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட வில்கம் முல் வித்தியாலயத்தில் 7 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாக பல தடவைகள் கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் இன்றுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
முதலாம் ஆண்டு தொடக்கம் ஒன்பதாம் ஆண்டு வரை மாணவர்கள் கல்வியை தொடர்கின்ற போதிலும் அப்பாடசாலையில் நிலவுகின்ற வெற்றிடங்கள் குறித்து எதுவித முன்னேற்றங்களும் இல்லை எனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தங்களுடைய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்கப்பட்டால் தாங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை திருகோணமலை கல்வி வலயம் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தராவிட்டால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM