மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 20 கிராம் 75 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (09) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு பிரிவினர் சம்பவ தினமான (09) இன்று மாலை வாழைச்சேனை சி.பி. வீதியில் உள்ள குறித்த கஞ்சா வியாபாரியின் வீட்டை சுற்றி வழைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 20 கிராம் 75 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பெருளை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
இதில் கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் எனவும் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM