(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாபலகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படாலம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும். இரு வேறுப்பட்ட கொள்கையினை கொண்டவர்கள் இணைந்து செயற்பட முடியாது என்பதை கடந்த அரசாங்கத்தில் இருந்து அரசியல் பாடமாக ஐக்கிய தேசிய கட்சியினர் கற்றுக் கொண்டும் அதனை தற்போது மறந்து விட்டார்கள்.
கூட்டணியின் ஊடாகவே பொதுதேர்தலில் வெற்றிப்பெறுவோம். 2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் புதிய கூட்டணியின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM