எத் தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கூட்டணி - வாசுதேவ நாணயக்கார

Published By: Vishnu

09 Feb, 2020 | 01:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டுமாயின் அனைத்து  பங்காளி கட்சிகளின் ஆதரவு அவசியமாகும் எனத் தெரிவித்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, எத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் பங்காளி கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட்டது.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  கூட்டணியில் பிரதான பங்கு வகிக்கின்றது. ஸ்ரீ  லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்  தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கே வழங்கப்பட்டன.  

இதில் எவ்வித மாற்றமும் இனி ஏற்படாது. கூட்டணியின்  தலைமைத்துவம் என்றும் இவர்  வசமாகவே இருக்க வேண்டும் என்பது கட்சியின் ஏகமனதான தீர்மானமாகும். கட்சியின் மொட்டு சின்னமும் அவ்வாறானதே.

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதே எமது பிரதான  எதிர்பார்ப்பாகும். 

பொதுத்தேர்தலை வழிநடத்தும் முழு பொறுப்பும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கூட்டணியமைத்தல் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் அமைக்கப்படும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47