கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் இராணுவ சீறுடையில் வந்த ஒருவரே ஷெர்சாட் மாவட்டத்தின் அமெரிக்க - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படையினர் மீது இயந்திர துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த துப்பாக்கிப் பிரயோகம் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்கையின்படி, உயிரிழந்த சேவை உறுப்பினர்களின் பெயர் மற்றும் விபரங்கள் அடுத்த 24 மணி நேரத்தின் பின்னரே அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் 12,000 முதல் 13,000 வரையான அமெரிக்க வீரர்கள் பயங்கரவாத குழுவுக்கு எதிராக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM