உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி வீதி, விலாங்குளம் பகுதியில் உப்புவெளி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று (08) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விளாங்குளம் கண்டி வீதி , உப்புவெளி சேர்ந்த 46 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 120 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேகநபரை உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
அதேவேளை திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இன்று (08) அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் நடத்துனரிடம் இருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபரிடமிருந்து 350 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர் போடியார் வீதி, அக்கரைபற்றை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை தலைமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM