காலி - கலங்கரை விளக்கத்திலிருந்து 120 கடல் மைல் தொலைவில் 92 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் மற்றும் 20 சட்டவிரோத போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இரு ரோந்து நடவடிக்கைகளின் போதே இவ்வாறு பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 120 கடல் மைல் தொலைவில் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவை கைப்பற்ற பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடற்படை தீவின் நீரில் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரோந்து நடவடிக்கையில் நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பல பொதிகளை கடற்படை கண்டுபிடித்துள்ளது. அதனுள் சுமார் 40 கிலோ எடையுள்ள ஈரமான பீடி இலைகள் காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதே கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு இழுவை படகொன்றை கடற்படை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் இருந்த, மேலும் 52 கிலோ பீடி இலைகள் மற்றும் 20 போதை மாத்திரைகளுடன் படகில் இருந்த 06 நபர்களை கடற்படை கைது செய்தது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேருவல மற்றும் மொனராகலை பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 42 வயதுடையவர்களாவர்.
சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், போதைப்பொருள் மற்றும் இழுவைப் படகுகள் மேலதிக விசாரணைகளுக்காக கரையோர பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM