நடிகர் அருண்பாண்டியன் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரித்து, நாயகனாக நடிக்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறனுடன் வலம் வரும் நடிகர் அருண்பாண்டியன், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றை தமிழில் தயாரித்து, அதில் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் கதையின் நாயகியாக அருண்பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.
‘தும்பா’ படத்தின் மூலம் கடந்த ஆண்டில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன், அடுத்ததாக நடிக்கவிருக்கும் இந்த படம், மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ‘ஹெலன் ’என்ற படத்தின் தமிழ் ரீமேக். தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை மையப்படுத்திய கதை என்பதால் அருண் பாண்டியனும், அவரது மகளான கீர்த்தி பாண்டியனும் தந்தை - மகள் ஆகவே நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கான தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்கி, தனக்கு பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்திய இயக்குநர் கோகுலுக்கு மீண்டும் அருண் பாண்டியன் வாய்ப்பளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், தன்னுடைய மகளும், நடிகையுமான கீர்த்திபாண்டியனின் விருப்பத்திற்காகவே இப்படத்தை தயாரிக்கிறார் என்கிறார்கள் திரையுலகினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM