சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதி மக்களினால் கிண்ணியா பிரதேச சபைக்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (07.02.2020) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிண்ணியா பிரதேசத்தை உள்ளடக்கிய மகமாரூ பிரதான வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்யுமாறும், போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், இதற்கென போராட்டக்காரர்கள் சார்ப்பில் 10 பேர் கொண்ட குழு ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன் பிரதேச செயலாளரே,பிரதேச சபை தவிசாளரே கவனமெடுக்கவும் ,உயிரை இழக்கு வைக்காதே ,கனரக வாகனத்தை தடை செய் என பல சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டவர் விஜயம் செய்து சாதகமான பதில் ஒன்றை முன்வைத்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM