(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸுக்கான எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விவாதம் அன்றையதினம் பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை இடம்பெறவிருப்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சி இவ்விவாதத்தை முன்வைக்கவுள்ளது.
அதேநேரம் கடந்த அரசாங்க காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்றை எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக ஆளும் கட்சி இங்கு தெரிவித்தது.
இந்த குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையும் விவாதம் முன்னெடுக்கப்படும்.
ஏதாவது ஒரு காரணத்தினால் குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படாவிட்டால் எதிர்வரும் 20ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தொடர்பில் முழுநேர சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM