(ஆர்.விதுஷா)
ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோத்தாபயரா ஜபக்ஷவுடன் , சஜித் பிரேமதாசவால் பிரதமராக இணைந்து பயணிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இந்த விடயம் கவலையளிப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் ,அவ்வாறு இணைந்து பயணிக்க வேண்டுமாயின் ஐ.தே.கவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, இவ்வாறு கூறிக்கொள்பவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிக்கலாமே எனவும் அவர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொன்சேகா மேலும் கூறியதாவது ,
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியமைக்க தயார் என்று கூறிக்கொள்கின்றனர்.
இது கவலையளிக்கின்றது. ஏனெனில் , ஜனாதிபதிக்கு என தனிப்பட்ட கொள்கை உண்டு அதன் படி அவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் எமக்கென தனித்த கொள்கையுண்டு. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமுண்டு.ஐ.தேக . உறுப்பினர்களுக்கென தனிப்பட்ட ரீதியில் கௌரவமுண்டு அதில் இருந்து விலகி மொட்டு கட்சியினருடன் கைகோர்க்கும் முயற்சியாகவே இதனை கூற முடியும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறாக அவர்களுடன் இணைந்து பயணிக்க தயாரெனின் அவர்கள் செய்த விடயங்கள் அனைத்தும் சரியென்றாகிவிடுமே. அந்த வகையில் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பயணிப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM