யாழ்ப்பாணம் - காக்கைதீவு வீதி வசந்தபுரம் பகுதியில் மிருக கழிவுகள் வீசுவதற்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் காக்கைதீவு அராலி வீதியில் நீண்டகாலமாக மிருக கழிவுகள் வீசப்பட்டுவருகின்றது இதுவரையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததையடுத்து ஜே85 வசந்தபுரம்பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் கழிவகற்றும் உழவு இயந்திரங்கள் அனைத்தும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது எனினும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் பொறியியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வீசப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுவதாகவும் அவ்விடத்தில் சட்டவிரோதமாகக் குப்பை வீசுபவர்களைக் கைது செய்வதற்காக உடனடியாக கண்காணிப்பு கெமரா பொருத்துவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவ்விடத்தை விட்டுக் கலைந்து சென்றதோடு குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் செல்ல அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM