மகாவலி 'எல்' வலயப் பகுதியில் தென் பகுதி மக்களைக் குடியேற்றியிருக்கும் பகுதிகளைத் தவிர்த்து அங்கு மிகுதியாக உள்ள வெற்றுக் காணிகளை அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக, ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு காணிகளை வழங்க ஆவன செய்ய வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1984ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு மண லாறு பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றிய பின் 1988,2007 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருந்த விஷேட வர்த்தமானி அறிவுறுத்தல்களின் மூலம் தமிழ் விவசாய மக்களின் விவசாய இடங்கள் மகாவலி 'எல்' பிரிவாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இதனால் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று மற்றும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரிவு தமிழ் விவசாய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இப் பகுதியில் தென் பகுதி மக்களைக் குடியேற்றிய பின் தமிழ்க் கிராமங்களினது பெயர்களும் குளங்களின் பெயர்களும் சிங்களப் பெயர் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த நிலையில் அப்பகுதியில் விவசாயம் செய்கின்ற தமிழ் மக்கள் அங்கு குடியேறி தங்கள் விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைகளும் காணப்படுகின்றன.
ஆகவே தென் பகுதி மக்களை குடியேற்றிய பகுதிகளைத் தவிர்த்து மகாவலி எல் வலய பகுதியிலுள்ள மிகுதிக் காணிகளை ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்து கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கும் அக் காணிகளை ஒப்படைத்து இச்செயலகங்கள் மூலம் இக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை இம் மக்கள் பெற ஆவன செய்யவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM