'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் பயணம் செய்த 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.
'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலானது தற்போது யோகோஹாமா துறைமுகத்திலிருந்து தொலைவில் 1,045 பணியாளர்கள் மற்றும் 2,666 பயணிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வரை இந்த கப்பலில் பயணித்த 20 பேர் கொரோன தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. இந் நிலையில் இன்றைய தினம் மேலும் 41 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஜப்பானில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் தொகை 86 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 11 பேர் அமெரிக்கர்கள் என்பதுடன், மொத்தத்தில் இந்த கப்பலில் 428 அமெரிக்க நாட்டுப் பிரஜைகள் உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கப்பலில் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக உள்ளூர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றனர்.
எஞ்சியுள்ள அனைவரையும் குறைந்தது 14 நாட்கள் கப்பலில் வைத்து தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
This is where the 61 people are from:
- Argentina (1)
- Australia (7)
- Canada (7)
- Hong Kong (3)
- Japan (28)
- New Zealand (1)
- Philippines (1)
- Taiwan (1)
- United Kingdom (1)
- United States (11)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM