(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் நிதி முகாமைத்துவத்தால் 2020ஆண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி, கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தேசிய பொருளாதாரத்தில் உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
வாசனைத்திரவியங்கள் மற்றும் சிறிய ஏற்றுமதிப் பயிர்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், மீள் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய ஏற்றுமதிப் பயிர்களுக்கு இலங்கையில் நியாயமான விலை கிடைத்துள்ளது.
அத்துடன் நமது நாட்டில் தற்போது சிறு ஏற்றுமதி பயிர்கள்மூலம் 65 பில்லியன் வருமானமாகப் பெறப்படுகிறது. எதிர்வரும் 5 ஆண்டுகளில் 100 பில்லியன் வரை அதனை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.
அதற்காக பயிர்களுக்கான உற்பத்தி செலவுகளை அரசாங்கம் வழங்கவுள்ளது. குறிப்பாக மிளகு, கறுவா உட்பட பல சிறு ஏற்றுமதி பயிர்களை உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
இவ்வாறு உற்பத்தியாளர்களுப்கு சலுகைகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எமது சர்வதேச சந்தையை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் புதிய சந்தை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM