(இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் தடயவியல் கணக்கறிக்கை அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல கடந்த 2010 -2013 வரையான காலப்பகுதியில் பிணைமுறி கொடுக்கல் வாங்களில் எவ்வித முறைக்கேடுகளும் இடம் பெறவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அறிக்கை முழுமையான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே பல விடயங்கள் நிரூபிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடி தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தடயவியல் கணக்கறிக்கை மிகவும் துல்லியமான தகவல்களையும், அழிக்கப்பட்ட தகவல்களை மீள் எடுத்து உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கியில் இரு தடவைகள் பிணைமுறிகள் விநியோகத்தில் மோசடிகள் இடம் பெற்றுள்ளன என்பதை எதிர்க்கட்சியினராக இருந்து பொதுஜன பெரமுனவினரே வெளிப்படுத்தினோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM