(இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மலையக மக்களுக்கு மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் 1000ம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்படும். அரசாங்கம் வழங்கி ய வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது. தோட்டகம்பனிகள் தொடர்பில் மார்ச் மாதம் 01ம் திகதிக்கு பிறகு தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவித்தார் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன.
அரசாங்கம் கூறியதற்கு அமைய அனைத்து பட்டதாரிகளுக்குமான தொழில்வாய்ப்பு பயிற்சிக்கு உயர் தேசிய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம. முழுமையான பயிற்சிக்கு பிறகே நிரந்த தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் தேவைகளுக்காக மலையக மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 1000ம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதாக வாக்குறுதி வழங்கவில்லை.
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படும் தேயிலை தொழிற்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் மலையக மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடைய வேண்டும் என்ற பொது காரணியை கருத்திற் கொண்டே அவர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மலையக மக்களிடம் வாக்குறுதி வழங்கினார்.
அரசாங்கம் குறிப்பிட்டதை போன்று மலையக மக்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து 1000ம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்று கிடைக்கப் பெற்ற அமைச்ரவை அனுமதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM