(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே ஏற்படக் கூடிய முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளும் நோக்கத்திலேயே 19 ஆவது அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக் கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடை யில் காணப்படும் அதிகார முரண்பாடு காரணமாகவே 19 இல் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுவதில் எவ்வித உண்மையும் கிடையாது. தற்போதைய பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் அவ்வாறு எவ்வித முரண்பாடும் கிடையாது.
எனினும் இவர்களின் பின்னர் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரக்கூடியவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. கடந்த ஆட்சி காலத்தில் மைத்திரி– - ரணில் முரண்பாடு இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். எனவேதான் எதிர்காலத்தில் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பிரச்சினை இருப்பதாகக் கூறும் ஐக்கிய தேசிய கட்சி தமக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வுகாணாமல் இருக்கிறது. கட்சி தலைவர் ரணில், கூட்டணி தலைவர் சஜித் என்று புரியாத கதையைக் கூறிக்கொண்டி ருக்கிறார்கள். இவர்கள் இருவரது தரப்பி லும் இரு குழுக்கள் பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றாமை குறித்து வெவ்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர் பொலன்னறுவையில் இருந்தமையால் தன்னால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பதை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நூற்றுக்கு முப்பது வீத பிரதிநிதித்துவம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே இணக்கம் காணப்பட்டுள்ளது. எனவே தற்போது அவ்வாறு செயற்பட முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கௌரவமான செயல் அல்ல.
மைத்திரிக்கு இணை தலைமைத்துவம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார். அவரது தலைமைத்துவத் தின் கீழ் கடந்த ஜனா திபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஆதரவளித்து பாரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம். அவரது வெற்றியில் சுதந்திர கட்சி பெரும் பங்காற்றியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுமார் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து வெற்றியை உறுதிப்படுத்திய சுதந்திர கட்சியை சிலர் புறக்கணிக்க எண் ணுவது கவலைக்குரிய விடயமாகும் என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM