(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குல் இடம்பெற்று நீண்ட காலத்தின் பின்னரும் கூட வடக்கில் சோதனைச் சாவடிகள் அமைத்து மக்களை வஞ்சிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாக சபையில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. முறையிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் சோதனைச் சாவடிகள் அமைத்து தமிழ் மக்களை வஞ்சிக்கும் எந்த செயற்பாடும் இடம்பெறவில்லை. நான் கண்ணை திறந்துகொண்டே வடக்கில் பயணிக்கிறேன். எனது கண்களுக்கு அவ்வாறு எதுவும் தவறாக தெரியவில்லை என்று பதில் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமருடனான கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இது குறித்து கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் கேள்வி எழுப்புகையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் வடக்கில் அதிகமாக சோதனைச் சாவடிகளை அமைத்து தேடுதல் நடந்தது. இப்போது மீண்டும் வடக்கில் சோதனைச் சாவடிகள் அமைத்து மக்களை வஞ்சிக்கும் நிலைமை உள்ளது. நாட்டில் குழப்பங்கள் இருந்தால் இராணுவ புலனாய்வினை பலப்படுத்தி செயற்பட வேண்டுமே தவிர மக்களுக்கு இடையூறு கொடுக்காது செயற்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் கூறுகையில்,
நீங்கள் கூறும் அளவுக்கு சோதனைச் சாவடிகள் இருப்பதாக நான் கருதவில்லை. எந்த விதத்திலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை வஞ்சிக்கப் போவதில்லை. மக்களை பாதுகாத்து முன்னேற்றும் முயற்சி களை மட்டுமே முன்னெடுக்கும். சமீப காலத்தில் நான் குறித்த பகுதிகளுக்கு சென்றேன். அவ்வாறு எதனையும் நான் பார்க்கவில்லை. நான் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்கும் ஆள் அல்ல. நான் கண்ணை திறந்துகொண்டே பயணிக் கின்றேன். நான் பார்த்த அளவுக்கு வடக் கில் சோதனை எதுவும் நடக்கவில்லை. உங்களின் கோரிக்கை நியாயமானது என் றால் நான் கவனத்தில் கொள்கிறேன். அவ்வாறு இடம்பெற்றால் நான் கவனம் செலுத்துவேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM