முல்லைத்தீவு வன திணைக்களத்தால் கடந்த ஒரு மாத கால பகுதியில் 13 இலட்சம் பெறுமதியிலான சட்டவிரோதக வெட்டி செல்லப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி து. கௌதமன் தெரிவித்துள்ளார் .
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு வனப்பகுதிகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்தி செல்லப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (04) முல்லைத்தீவு வள்ளிபுனம் காட்டு பகுதியிலிருந்து சட்டவிரோதமாக வெட்டி செல்லப்பட்ட 1 1/2 இலட்சம் ரூபா பெறுமதியிலான பாலை மரக்குற்றிகளுடன் வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
இதன்போது மரம் கடத்தியவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் வாகனத்திலிருந்து 1.32.500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது .
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இன்றையநாள் வரையான காலப்பகுதியில் 17 வாகனங்களுடன் 13 இலட்சம் பெறுமதியிலான மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யபட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதில் 07 வழக்குகள் இன்று வரையிலான நாட்களில் நிறைவடைந்துள்ளது . இந்த வழக்குகளுக்காக இரண்டு இலட்சத்து ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி து. கௌதமன் தெரிவித்துள்ளார் .
குறைந்தளவான ஆளணி வழங்களுடன் முல்லைத்தீவு வன திணைக்களம் இயங்குகின்ற போதிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டு வருகின்றதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி து. கௌதமன் மேலும் தெரிவித்தார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM