பொகவந்தலாவை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை - பெட்ரசோ தோட்டம் பகுதியில் நேற்று இரவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 48, 50 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அதேபகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரத்தினக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 40, 47 மற்றும் 50 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM