திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபையின் ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கி வந்து இடைநிறுத்தபட்ட கோயிலடி உப அலுவலகம் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேற்று (04) காலை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச சபையின் தமிழ் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இனங்க திறந்து வைக்கப்பட்ட இந்த உப அலுவலகத்தின் செயற்பாடுகள் 1995ம் ஆண்டுக்கு பின் யுத்தம் காரணமாக முள்ளிப்பொத்தானையில் உள்ள பிரதான அலுவலகத்தின் கீழ் மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 25 அண்டுகளின் பின்னர் இவ் உப அலுவலகமானது இப்பகுதியின் தமிழ் உறுப்பினர்களினதும் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இனங்க திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலமாக பிரதேச சபையின் சேவைகளான நீர் வளங்கள் வடிகால் வெட்டுவதற்கான அனுமதி கடைகளுக்கான வரி செலுத்துதல் , முற்சக்கரவண்டிக்கான அனுமதி பெறல், கிணறு வெட்டுவதற்கான அனுமதி ,மலசல கூட குழி வெட்டுவதற்கான அனுமதி , வானங்களை வாடகைக்கு பெறல் போன்ற சேவைகளை இவ் அலுவலகம் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் மூலம் 10 கிலோமீற்றர் சென்று தமது சேவையைப் பெற வேண்டிய நிலையில் இருந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் 5க்கு மேற்பட்ட தமிழ் கிராம மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM