(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
மகாவலி எல் வலயத்தில் நீர்வழங்கள் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றீடான நிலங்களை உரிய தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் என சபையில் அறிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் இது குறித்து கலந்துரையாட தயாராக இருப்பதாக கூறினார்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட மகாவலி எல் வலயத்தில் தமிழ் மக்களின் எந்தவொரு காணியும் சிங்கள மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட மகாவலி எல் வலய வர்த்தமானி அறிவித்தல் குறித்து கேள்வி எழுப்பினார்,
குறிப்பாக மகாவலி எல் வலயத்தில் உள்ள தமிழர் நிலங்களை அபகரித்து அவற்றை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காணிகளை பிரதேச செயலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இது குறித்து பிரதமர் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக் கொடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறுனார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM