ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட  முடியுமென சஜித் கூறுவது நகைப்பிற்குரியது : பீரிஸ் 

Published By: R. Kalaichelvan

03 Feb, 2020 | 09:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து தன்னால் செயற்பட  முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ  குறிப்பிடுவது நகைப்பிற்குரியன.

பொதுத்தேர்தலை தொடர்ந்து  மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவி வகிப்பார் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் ,இன்று இடம்  பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட  தயார்  என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது  நகைப்பிற்குரியன. பொதுத்தேர்லில் ஐக்கிய தேசிய கட்சியால் ஒருபோதும் வெற்றிப் பெற முடியாது.

நாட்டு மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதற்கட்டமாக திருத்திக் கொண்டுள்ளார்கள்.

இதன் தன்மையே இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலிலும்  கிடைக்கப் பெறும்.

ஜனாதிபதியின் கொள்கைக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை மக்கள்  வெறுத்தமையினால் தான் ஜனாதிபதி தேர்தலில் புறக்கணித்தார்கள். முரண்பாடான இரு தரப்பு கொள்கையினையும் கொண்டு சிறந்த   அரசாங்கத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.

ஜனாதிபதியும், பிரதமரும் ஒருமித்த கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் இல்லாவிடின் பலவீனமான அரசாங்கமே தோற்றம் பெறும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது நல்லாட்சி அரசாங்கம்  சிறந்த எடுத்துக்காட்டு இரு பிரதான அரசியல்  தலைவர்களுக்கும் இடையில்   காணப்பட்ட தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடுகளே பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு  பிரதான காரணியாக அமைந்தன.

பொதுத்தேர்தலை தொடர்ந்து பிரதமர் பதவி வகிப்பேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது ஒருபோதும்  நிறைவேறாது.

தற்போதைய  பிரதமர்  மஹிந்த  ராஜபக்ஷவே பொதுத்தேர்தலின் பின்னரும் பிரதமராக பதவி வகிப்பார் என்பதை  பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20