(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து தன்னால் செயற்பட முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது நகைப்பிற்குரியன.
பொதுத்தேர்தலை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவி வகிப்பார் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் ,இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது நகைப்பிற்குரியன. பொதுத்தேர்லில் ஐக்கிய தேசிய கட்சியால் ஒருபோதும் வெற்றிப் பெற முடியாது.
நாட்டு மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதற்கட்டமாக திருத்திக் கொண்டுள்ளார்கள்.
இதன் தன்மையே இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலிலும் கிடைக்கப் பெறும்.
ஜனாதிபதியின் கொள்கைக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை மக்கள் வெறுத்தமையினால் தான் ஜனாதிபதி தேர்தலில் புறக்கணித்தார்கள். முரண்பாடான இரு தரப்பு கொள்கையினையும் கொண்டு சிறந்த அரசாங்கத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.
ஜனாதிபதியும், பிரதமரும் ஒருமித்த கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் இல்லாவிடின் பலவீனமான அரசாங்கமே தோற்றம் பெறும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது நல்லாட்சி அரசாங்கம் சிறந்த எடுத்துக்காட்டு இரு பிரதான அரசியல் தலைவர்களுக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடுகளே பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக அமைந்தன.
பொதுத்தேர்தலை தொடர்ந்து பிரதமர் பதவி வகிப்பேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது ஒருபோதும் நிறைவேறாது.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொதுத்தேர்தலின் பின்னரும் பிரதமராக பதவி வகிப்பார் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM