சாரதி அனுமதிபத்திரமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கெபித்திக்கொள்ளாவை மாவட்ட நீதிபதி மாளிந்த ஹர்ஷன டி அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கெபித்திகொள்ளாவை - பதவிய பிரதான வீதியில் குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேக நபரை மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிஞ்சை காட்டிய போதிலும் அதனை பொருட்படுத்தாமல் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் குடிபோதையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
அதன்போது சந்தேக நபர் பொலிஸார் மீது அவதூறாகப் பேசி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் சந்தேக நபரை பொலிசார் கைது செய்த நிலையில் , தனக்கு அதிகமாக முதுகுவலி காணப்படுவதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சந்தேக நபரை பொலிசார் பதவிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM