முகக் கவசத்தை அணியுமாறு ஒருபோதும் அறிவிக்கவில்லை - சுகாதார அமைச்சு 

Published By: Vishnu

03 Feb, 2020 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்தாலும் இலங்கையில் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாராதூரமான நிலைமை கிடையாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். 

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

கொரோனா வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவி வருகின்றது. அதே போன்று ஏனைய சில நாடுகளிலும் இணங்காணப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இது வரையில் அவ்வாறான பாரதூரமான நிலைமை எதுவும் ஏற்படவில்லை. வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அதி உயர் நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மேல் மாகாண ஆளுனர், இராணுவம், விமானப்படை, குடிவரவு - குடியகழ்வு திணைக்களம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள தேசிய செயற்பாட்டு குழு தினமும் விமான நிலையத்தில் கூடி நிலைமைகளை ஆராய்கிறது. பயணிகள் மாத்திரமின்றி சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே சாதாரண தடிமன் அல்லது இருமள் என்பவற்றுக்குள்ளானோர் முகக்கவசம் அணிவது வழமையாகும். அவர்கள் தமது பாதுகாப்பிற்காகவும் ஏனையோருக்கு அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் முகக் கவசம் அணிந்திருக்கலாம். ஆனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அநாவசியமானதாகும். இவ்வாறு மக்கள் அநாவசிய பீதியடைத் தேவையில்லை. முகக் கவசத்தை அணியுமாறு சுகாதார அமைச்சு ஒரு போதும் அறிவிக்கவில்லை. 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இணங்காணப்பட்ட சீனப் பெண்ணும் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். எனினும் அவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் எப்போது செல்ல வேண்டும் என்பது தொடர்பில் அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களே தீர்மானிப்பர். 

இலங்கையுடன் நீண்ட காலமாக நட்புறவை பேணும் நாடாக சீனா காணப்படுகிறது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சீன அரசாங்கத்துடன் கொண்டு அந்நியோன்யமான உறவுகளினாலேயே 33 மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வரக் கூடியதாக இருந்தது. 

உள்நாட்டு யுத்தத்தின் போது தேசிய பாதுகாப்பு சபையில் அங்கத்தும் வகித்த நாடுகளில் சீனாவே முதலில் இலங்கைக்கு உதவியது. எனவே அவ்வாறான விடயங்களை மறந்து அந்நாட்டுக்கு பயணத்தடை விதிப்பது பொறுத்தமானதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10