சிரியாவின் வடமேற்கு இட்லிம் பிராந்தியத்தில் இன்றைய தினம் சிரிய அரச படையினர் நடத்திய தீவிர ஷெல் தாக்குதலில் நான்கு துக்கிய வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் துருக்கிய படைகள் உடனடியாக பதிலடி கொடுத்து, மேலும் பல இலக்குகளை அழைத்துள்ளதாகவும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
துருக்கியப் படைகளின் இருப்பிடங்கள் குறித்து முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் சிரியப் படைகள் இந்த ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளன.
சிரிய அரசாங்கத்தின் இந்த தாக்குதலுக்கு மத்தியில் ஒரு பெரிய துருக்கிய இராணுவக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரிய எல்லைக்குள் ஊடுறுவியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்த துருக்கிய இராணுவக் குழுவில் பல கவச வாகனங்கள், எரிபொருள் டேங்கர்கள் மற்றும் லொறிகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM