சிரிய அரச படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் 4 துருக்கிய வீரர்கள் பலி, 09 பேர் காயம்!

Published By: Vishnu

03 Feb, 2020 | 11:59 AM
image

சிரியாவின் வடமேற்கு இட்லிம் பிராந்தியத்தில் இன்றைய தினம் சிரிய அரச படையினர் நடத்திய தீவிர ஷெல் தாக்குதலில் நான்கு துக்கிய வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் துருக்கிய படைகள் உடனடியாக பதிலடி கொடுத்து, மேலும் பல இலக்குகளை அழைத்துள்ளதாகவும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

துருக்கியப் படைகளின் இருப்பிடங்கள் குறித்து முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் சிரியப் படைகள் இந்த ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளன.

சிரிய அரசாங்கத்தின் இந்த தாக்குதலுக்கு மத்தியில் ஒரு பெரிய துருக்கிய இராணுவக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரிய எல்லைக்குள் ஊடுறுவியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த துருக்கிய இராணுவக் குழுவில் பல கவச வாகனங்கள், எரிபொருள் டேங்கர்கள் மற்றும் லொறிகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52