திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு பகுதியில் லொறி தீ பற்றிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை - மிகிந்த புரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பொலன்நறுவை-ஹிங்குராங்கொட பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டமைமையினால் நேற்று அதிகாலை (01) சனிக்கிழமை பாலம் போட்டாறு பகுதியில் லொறியை நிறுத்திவிட்டு தூங்கியதாகவும் இதன்போது தீப்பற்றிய நிலையில் லொறியின் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலத்தை பார்வையிடுவதற்காக தீப்பற்றிய இடத்திற்கு திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் றுசிர நதீர சென்று பார்வையிட்டதுடன் சடலத்துக்கு அருகில் சால்வையொன்றும் அந்த சடலத்தின் வாயில் மண்ணெண்ணெய் துர்நாற்றம் வீசுவதாகவும் சால்வையை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இதேவேளை உயிரிழந்த சாரதியின் சடலத்தை சீ. டி. ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததாகவும் அதனுடைய அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், நாளை திங்கட்கிழமை பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் றுசிர நதீர தெரிவித்தார்.
அத்துடன் உயிரிழந்த லொறி சாரதியுடன் உதவியாளர் வந்ததாகவும் உதவியாளர் தொடர்பில் எதுவித தகவல் இல்லை எனவும் சாரதியுடன் உதவியாளர் வந்தாரா என்பது பற்றிய விபரங்களை விசாரணை செய்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM