முன்னாள் பொது நிர்வாகத்துறை மற்றும் நெசவுக் கைத்தொழில் அமைச்சர் யூ.பி.விஜயகோன் கண்டி வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்துள்ளார்.
விஜயகோன் வெலிமடையை சேர்ந்தவர் என்றும், இவர் தன் பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் போது, 79 வயதுடைய இவர் ஒரு ஆசிரியராகவும் பின்னர் சிவில் சேவை அதிகாரியாகவும் இலங்கை பொது நிர்வாக சேவையில் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார்.
மேலும், ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யாழ். மாவட்ட அமைச்சராக விஜயகோன் கடமையாற்றியுள்ளார்.
விஜயகோன் 2003 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது அரசியல் பிரவேசத்தின் பின்னர், தம்பதெனிய தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராவும் அமைச்சராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளிக்கிணங்க அவரது பூத உடல் பேராதனை பல்கலைகழகத்தின் வைத்திய பீடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM