பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும் இதற்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இடம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்
பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆசனப்பகிர்வு தொடர்பில் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பாராளுமன்றத் தேர்தலில் புதியவர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது காலத்தின் தேவை குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும். வாக்காளர்களில் 54 சத விதம் பெண்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேர்தலில் நியமனம் கொடுக்காதது தவறு ஐம்பதிற்கு ஐம்பது கொடுக்காது விட்டாலும் மாவட்ட ரீதியில் இருவர், மூவருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்திலும் இவ்விடயத்தை குறிப்பிட்டேன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இம்முறையும் கூறியுள்ளேன் நடவடிக்கை எடுக்கப்படும் புதியவர்கள் உள்வாங்குகின்றபோது தற்போதுள்ளவர்களையும் புதியவர்களையும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்குள்ள தகுதிகள் தராதரங்களை பார்த்து திறமையானவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவேண்டும்.
கடந்த முறை தேர்தலின் போது குறித்த விடையத்தைச் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்கிவிட்டு வெற்றிடமாக இருக்கின்ற இடத்திற்கு வெல்லக்கூடியவர்களை நிறுத்தப்படவில்லை. கட்டாயம் தோற்பவர்களையத்தான் தேர்தலில் நிறுத்தியுள்ளார்கள்.
பத்துப் பேரை நியமிக்கின்றபோது ஏழு பேர்தான் தேவை என்றால் மிகுதி மூன்றுபேர் தோற்கடிக்கப்படவேண்டும் தோற்கின்றவர்கள் நாங்களாக இருக்கக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான நிகழ்வு நடைபெறுகின்றது எங்களுடைய விடுதலைப் பாதையை அடைவதற்கு அதற்காக உழைப்பவர்கள் உள்வாங்கப்படவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM