பாதிக்கப்பட்ட பெண் என்றும் பாராது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் என்மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார் விசாரணை ஒன்று இடம்பெற்று அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அவ் அறிக்கை பற்றி எதையுமே வெளிப்படுத்தவில்லை.
நேர்மையானவர் என்றால் அதனை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டை வைத்தவர் அதற்கான அறுவடை அவருக்குக் கிடைக்கும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத்துறையில் நிதி மோசடி இடம்பெற்றதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
தமிழ்ச்தேசியக் கூட்டமைப்பில் இருந்து நான் விலகி ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் என்ற கட்சியை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றேன். எனக்குள்ள ஆதரவினை பார்த்து பொறாமைப்படுவதன் விளைாவக ஆளுநருக்கு கூட்டுறவுத்துறையில் மோசடி இடம்பெற்றதாகவும் அதனை விசாரிக்க குழு ஒன்றுநி யமித்து அறிக்கையிடுமாறு தொடர்சியாக கோரிக்கை முன்வைத்திருந்து.
இந்த நிலையில் அந்த அறிக்கையும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கூட்டுறவுத்தறைியல் எத்தகைய மோசடியும் இடம்பெறவில்லை என்பது தெளிவான நிலையில் மோடி இடம்பெற்றுள்ளதாக அறிக்கை விடுகின்ற அவைத்தலைவர் அறிக்கை வெளிவந்ததன் பின்னர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. உண்மை வெளிவந்தால் எனக்கு ஆதரவு அதிகரித்துவிடும் என்பதால் தான் மௌனத்தில் இருக்கின்றார்.
என்மீதான குற்றச்சாட்டுக்களை செலுத்துகின்றபோது நான் மட்டுமன்றி நிர்வாகத்தில் இருப்பவர்களையும் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றார்கள். ஆனால் எனது அமைச்சில் இருந்து அதிகாரிகளே திறமையான அதிகாரிகள் அவைத்தலைவராக இருப்பவர் தனக்குத்தான் எல்லாம் தெரியும் எனக் கூறுகின்றவர்,
அவர் மாகாண சபையில் செய்த முறைகேடுகளும் விடுதலைப்புலிகள் காலத்தில் செய்த அநியாயங்களும் எங்களுக்குத் தெரியும் அவர் குற்றம் சாட்டுகின்றார் என்பதற்காக நாங்களும் அதற்காக திருப்பி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் அர்த்தம் இல்லை. என்மீதான குற்றச்சாட்டுக்கு அவர் அறுவடையை அனுபவிப்பார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM