(இராஜதுரை ஹஷான்)
சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தமிழ் மக்களை புறக்கணித்ததாகவே கருத முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டுமாயின் தமிழ்-முஸ்லிம் மக்களின் தனித்துவங்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து இன மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டன. தமிழ் -முஸ்லிம் மக்களின் அரசியல் மற்றும் பொது உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதன் காரணமாக தேசிய நல்லிணக்கம் முன்னேற்றமடைந்தன.
இதன் பின்னரே இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட்டன. ஆனால் இந்த நிலைமை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM