தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியம் பேசிக்கொண்டு தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டே வருகின்றது. இவர்களின் இந்த ஏமாற்று வித்தையை தமிழ் மக்கள் இன்று உணரத் தொடங்கிவிட்டனர். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழர்களின் இருப்பை பலப்படுத்துவதே எமது இலக்காகும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
துறைநீலாவணையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மாவை சேனாதிராஜாவைத் தவிர ஏனையவர்கள் தமிழ்த் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள். தமிழ்த் தேசியம் பேசுவதற்கு மாவை சேனாதிராஜாவுக்கு மட்டுமே அருகதையுள்ளது. இவர் தமிழ்த் தேசியத்துக்காக அன்றும் இன்றும் உணர்வு பூர்வமாக போராடி வருபவர் .எங்களைப்போன்றவர்களை ஆயுதப் போராட்டத்துக்கு அனுப்பி வைத்தவர்களுள் இவரும் ஒருவர். இதற்காக வேண்டி நான் என்றும் அவரை மதிக்கிறேன்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய மாவட்ட தமிழ் மக்களைவிடவும் பல சவால்களுக்கும் இன்னல்களுக்கும் இன்னும் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான அதிகாரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்தும் அதனை அவர்கள் செய்யவில்லை. இது விடயத்தில் தம்மை ரணில் ஏமாற்றிவிட்டதாக கூட்டமைப்பு தற்போது நாடகமாடுகிறது.
எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்ளிக்க வேண்டும். என்னை இன்று பலர் துரோகி என்கின்றார் கள். ஆனால் தேசியத் தலைவர் பிரபாகரன் என்னை ஒருபோதும் துரோகி என்று குறிப்பிடவில்லை. ஆகவே யார் துரோகி என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM