(ஆர்.விதுஷா)
தொழில் நிமித்தம் கொரியாவிற்கு சென்று அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் விதிகளை மீறி அங்கு தங்கியிருப்பவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த பொதுமன்னிப்புக் காலம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையன ஆறு மாதகாலப்பகுதியில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.
இந்த காலப்பகுதியில் வீசா இன்றி கொரியாவில் தங்கியிருப்பவர்கள் எந்த அபராதமும் விதிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் .
அத்துடன் , அவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பின்னர் வெளியேற முடியும்.
ஏனெனில் அவர்கள் தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இ இலங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் எவராயினும் இவ்வாறாக சட்டவிரோதமான முறையில் கொரியாவில் தங்கியிருப்பார்களாயின் அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு கோரப்பட்டுள்ளதுடன், மேலதிக தகவல்களை 1345 என்ற இலக்கத்தின் ஊடாக கொரிய அழைப்பு மையத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM