(நா.தனுஜா)
நாட்டு மக்களின் நலனை முன்நிறுத்திய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை.
உண்மையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மீண்டும் ஆட்சியதிகாரத்தை தனியொரு குடும்பத்தின்வசம் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகிறது.
ஆனால் இதனைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதளவிற்கு மக்கள் முட்டாள்களாக இருக்கமாட்டார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
தற்போது சவாலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டுமக்களைப் பாதுகாப்பதற்கு கட்சிபேதங்களைக் கடந்து நாமனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். ஆனால் இந்நிலை தொடர்பில் அரசாங்கம் இன்னமும் விரிவான அடிப்படைகளில் சிந்திக்கவில்லை என்பது புலனாகின்றது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களின்றி தற்போது ஒருமித்து செயற்பட வேண்டும் என்பதாலேயே விரைவாகப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருந்தார்.
அதனூடாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய அரசியல்கட்சிகள் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அதேபோன்று வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன்.
ஆனால் அரசாங்கம் போதிய முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் பிரத்யேக இடமொன்றில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பஸ் ஒன்றின் ஊடாகக் கொண்டு செல்லப்பட்டு, விசேட பிரிவொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
இந்நிலையில் அவ்வாறு வெளியேறும் பயணிகள் நடமாடும் இடங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றைப் பேணுவது மிகவும் பயனுடையதாக அமையும் என்று அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்கின்றோம்.
அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதையும், விமானநிலையத்திலிருந்து வெளியேறிய பயணிகளில் எவருக்கேனும் நோய்த்தொற்று காணப்படுமாயின் அவர்களைக் கண்டறிவதற்கும் இலகுவாக இருக்கும்.
அடுத்ததாக புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்று சுமார் 2 மாதங்கள் கடந்திருக்கின்றன. எனினும் புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்தவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையொன்று தற்போது ஏற்பட்டிருக்கிறது.
தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மாத்திரமல்ல, எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறந்த திட்டங்களையும் தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தி வருகின்றது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM