(ஆர்.யசி)
சட்டமா அதிபர் தப்புல டி.லிவேராவின் செயற்பாடுகள் குறித்து அரசியல் அமைப்பு பேரவையில் சபாநாயகருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், சட்ட மாஅதிபர் தப்புல டி.லிவேராவை சந்தித்து பேசியுள்ளார்.
சட்டமா அதிபர் தப்புல டி.லிவேரா அண்மையில் நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்ய வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிகள் தமது கடுமையான கருத்துக்களை பதிவு செய்த நிலையில் அரசியலமைப்பு பேரவையில் இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆம் திகதி நடைபெற்ற அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதற்கு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், சட்ட மாஅதிபர் தப்புல டி.லிவேராவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. .
இருவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து சட்ட மாஅதிபர் விரிவான விளக்கத்தை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் வழங்கியிருந்தார்.
சட்ட மாஅதிபரினால் வழங்கப்பட்ட விரிவான விளக்கத்தையடுத்து, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின எதிர்கால நடவடிக்கைகளின் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பில் சபாநாயகரும், சட்ட மா அதிபரும் இணங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி தலையிட்டு நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவின் கைதை தடுத்த நிலையில் சபாநாயகர் இது குறித்தும் ஆளும் கட்சிகளின் ஆவேசமான கருத்துக்கள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM