ஐ.தே.க ஆட்சி தொடர்ந்திருந்தால் கொரோனா வைரஸினால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் : சுதந்திர கட்சி 

Published By: R. Kalaichelvan

29 Jan, 2020 | 05:20 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தற்போதும் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியாது. மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலைமையே காணப்பட்டிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமயகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கிறது.

எனவே மக்கள் இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும் அவதானமாக இருக்க வேண்டும். 

இந்த வைரஸ் பிரச்சினை வெறுமனே பணத்தின் மூலம் சரி செய்யக் கூடியதல்ல. அனைவரும் ஒன்றிணைந்து அறிவு பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் சரி செய்யக் கூடியதாகும். 

கடந்த அரசாங்கமே தற்போதும் ஆட்சியில் இருந்திருந்தால் இவ்வாறு துரிதமாகச் செயற்பட்டிருக்காது. எந்த பிரச்சினையானாலும் எமக்கு முகங்கொடுக்க முடியும் என்று கூறிவிட்டு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமலேயே இருந்திருப்பர். இதனால் மக்களும் அச்சத்துடனேயே இருந்திருப்பார்கள். ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்த்திருக்கிறது. 

இந்த வைரஸ் தொற்றானது சுகாதார பிரச்சினை மாத்திரமல்ல. குடிவரவு - குடியகழ்வு என பல்வேறு துறைகளிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது.

எனவே தற்போது எத்தனை வைத்தியர் , தாதியர் இருக்கின்றனர் என்று தேடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இதுவல்ல. எந்தளவுக்கு இந்த பிரச்சனைக்கு முகங்கொடுக்க முடியும் என்பது தொடர்பில் ஆராய்வதே அத்தியாவசியமானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56