கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் பெண் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி
வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 387 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொம்பனித்தெரு
கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்ப்டட சோதனைகளின் போது 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34 வயதான கொம்பனித்தெரு பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் மற்றுமொரு சந்தேக நபரையும்அதே பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
மருதானையை சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் 500 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 75 கிராம் அளவிலான கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM