சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளான ஒரு சீனர் அடையாளம் கண்டிருப்பதனால், "கொரோனா வைரஸ்" தாக்கத்தின் இலங்கை நிலை பற்றி ஆராய சுகாதாரம் மற்றும் மனித நலனோம்பு விடயங்களுக்கான துறைசார் பாராளுமன்ற மேர்பார்வை குழு நாளை (30/01) அவசரமாக கூடவுள்ளதாக குழுவின் தலைவரும் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தவாரம் பாராளுமன்ற அமர்வுகள் இல்லாதபோதும் கொரனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை இடுவதற்காக சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் நாளை 30 ஆம் திகதி காலை பத்து மணிக்கு பாராளுமன்ற குழு (7) அறையில் அவசரமாக கூட உள்ளது.
இது தொடர்பான அவசர அறிவித்தல்கள் குழுவின் உறுப்பினர்களான ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுகாதார அமைச்சின் துறைசார் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் கூடுமிடத்து இந்த கூட்டம் தொடர்பான அறிக்கையை தேவை ஏற்படின் சபையில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குழு தலைவர் திலகர் எம்பி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM