(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை எந்த பிரேரணையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. மார்ச் மாதம் வரைக்கும் பொய்களை தெரிவித்து காலத்தை கடத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள்முதல் பல்வேறு வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலத்தை கடத்திவருவதை காண்கின்றோம். ஆரம்பமாக ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு வைரஸில் சிக்குண்டு ஒரு மாதகாலத்தை கடத்தியிருந்தது. அதன் பின்னர் பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை பிடித்துக்கொண்டு செயற்பட்டது. தற்போது கொரோனா வைரஸை காரணம் காட்டி செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை ஒரு பிரேரணையாவது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் மக்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள தேவையான சட்ட திட்டங்களை அங்கீகரித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு பெரும்பான்மையில்லை. அவ்வாறு சட்டமூலம் கொண்டுவந்து அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல. அதனால் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவிக்கின்றார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அது தோற்கடிக்கப்பட்டால் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் கூற்று நியாயமாகும். அத்துடன் அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் அந்த விடயத்தை முன்னிலைப்படுத்தியே அரசாங்கத்துக்கு பொதுத்தேர்தலில் பாரிய பிரசாரத்தை கொண்டுசென்று பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. மார்ச் மாதம்வரை அரசாங்கம் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றப் போவதில்லை. அதனால் தான் பெரும்பான்மை இல்லை என்ற பொய்க்குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றது.
2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு வாக்குறுதியளித்து நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க அன்று நடவடிக்கை எடுத்தது. அப்போது அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் 42 பேர் இருந்தனர். இருந்தபோதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அன்று எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்்ஷ உட்பட எதிர்க்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்தது. அதேபோன்று மக்களுக்கு நன்மையளிக்கும் அரசாங்கத்தின் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவே காய்களை நகர்த்திவருகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டால் சர்வாதிகார ஆட்சியே நாட்டில் இடம்பெறும். 2015க்கு முன்னர் இடம்பெற்ற அடக்குமுறை ஆட்சியை தொடர்ந்தும் மேற்கொள்ளவே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருகின்றது.
அரசாங்கம் சிங்கள மக்களுக்கு பொய்க்குற்றச்சாட்டுக்களை தெரிவித்தும் இனவாத கருத்துக்களை பரப்பியுமே ஆட்சிக்கு வந்தது என்பதை தற்போது சிங்கள மக்கள் உணர்ந்து வருகின்றனர். ஏனெனில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தெரிவித்த எந்தக் குற்றச்சாட்டையும் இதுவரை உறுதிப் படுத்தவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM