ஒருபோதும் குறுக்கு வழிகளை நாடாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என சச்சின் டெண்டுல்கர் இளைஞர்களிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
உலகின் முன் அம்பலப்படுவதை தவிர்க்கவேண்டும் என்றால் வாழ்க்கையில் இளைஞர்கள் குறுக்கு வழிகளை நாடுவதை தவிர்க்கவேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
எனது வாழ்க்கையில் நான் பல பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன், நான் அதிகம் பேசாது விட்ட விடயம் ஒழுக்கம்,மனதை ஒருமுகப்படுத்துதல்,கவனம், திட்டமிடல், செயற்படுத்துதல் ஆகும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் நான் எதிர்பார்த்தது போன்று என்னால் விளையாட முடியாமல் போயுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நானும் தோற்றிருக்கின்றேன் ஆனால் விளையாட்டும் சரியான அணியும் மீண்டும் எழுவதற்கும் ஏமாற்றாமல் இருப்பதற்கும் எனக்கு கற்றுக்கொடுத்தது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
பல சவால்கள் எழக்கூடும் ஆனால் ஏமாற்றவேண்டாம் ஏமாற்றினால் ஒரு நாள் உலகின் முன் அம்பலப்படுவீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான உடற் தகுதி மிக்க இந்தியா குறித்த தனது விருப்பத்தையும் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.
நாங்கள் ஏதாவது விளையாட்டை விளையாட முயலவேண்டும், பழகிக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் அது சுவாரஸ்யமானதாக விளங்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவை விளையாட்டை நேசிக்கும் நாட்டிலிருந்து விளையாட்டில் ஈடுபடும் நாடாக மாற்றுவதே எனது கனவு எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இது சிறந்தஉடல் குறித்த விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் சிறந்த உடல் நலத்தை பேணவேண்டும் புதிய வாழ்க்கை முறையை வாழவேண்டும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM